இன்றைய சிந்தனைக்கு...
வாழ்வின் ஒவ்வொரு முறையும், உங்களை தூக்கி எறிந்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள்தான் உங்களை முளைக்க செய்தவர்கள் - விதைகள்
சிந்தனைகள் தொகுப்பு
தெளிவான சிந்தனையே, சிறந்த ஆசிரியர்!
கண்ணால் காணாத கடவுளுக்காக உழைக்கிறேன் என்பதைவிட கண்ணால் காணும் உயிருக்காக உழைக்கிறேன் என்பது மேலானது!
வெற்றியின் படிகள்: முதல் படி - தோல்வி, 2ம் படி - அவமானம், 3ம் படி - கடின உழைப்பு, 4ம் படி - தன்னம்பிக்கை, அடுத்தடுத்த படிகள் - விடா முயற்சி, கடைசி படி - வெற்றி
துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை!
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, இலட்சியத்தை நினைத்து வியர்வை சிந்துவது மேல்!
ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட, விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவனே வெற்றி பெறுவான்!
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது, கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன!
சென்று கொண்டிருப்பவன் காலத்தை வென்று கொண்டிருக்கிறான்! நின்று கொண்டிருப்பவன் காலத்தை தின்று கொண்டிருக்கிறான்!!
முடியும் வரை முயற்சி செய்! உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்தது முடியும் வரை!
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம் - ஹெலன் கெல்லர்
வெறும் வளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை. சிந்தனைதான் மனிதனை உருவாக்குகிறது.
உலகிற்கு அரசனாக இருக்க வேண்டுமானால் முதலில் உன் மனதுக்கு சேவகனாக இருக்க பழகு!
விடியும் என்று விண்ணை நம்பும் நீ, முடியும் என்று உன்னை நம்பு!
வாழ்வின் ஒவ்வொரு முறையும், உங்களை தூக்கி எறிந்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள்தான் உங்களை முளைக்க செய்தவர்கள் - விதைகள்
நேரம் சரியில்லை - இது திறமை இல்லாதவனின் வெற்று பேச்சு, நேரம் போதவில்லை - இது வெற்றி வீரனின் உயிர் மூச்சு
எந்த ஒரு வேலையிலும் நீ காலம் தாழ்த்துவது என்பது நீ, தோல்வி அடைய அந்த தோல்வியிடமே தோள் கொடுப்பதற்கு சமம்.
வீண் யூகங்களை மனதில் இருந்து அகற்றிவிட்டாலே போதும், போர் ஆயுதங்களைக் கூட எளிதில் தகர்த்து விடலாம்!
எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எண்ணுவதைவிட, நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று நினைப்பதே வாழ்வை நலமாக்கும்
வாழ்க்கை பயணம் ஒவ்வொருநாளும் புதிய அனுபவத்தை தருகிறது. அதை நாம் கற்றுக்கொண்டு வருகின்ற நாளை சிறப்பாய் அமைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையே செய்யும் வேலைதான் ஓய்வு. – அண்ணா
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அண்ணா
விதைத்தவன் உறங்கலாம், ஆனால் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!
அமைதியை உங்களுக்குள் தேடுங்கள் மற்றவர்களிடம் தேடாதீர்கள் - புத்தர்
நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது. நாளை நடப்பதை தடுக்கவும் முடியாது. இன்றைய பொழுதில் இக்கணத்தில் வாழுங்கள், அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு - புத்தர்
வரலாற்றில் வெற்றி பெற்றவனும் இடம்பெற முடியும், தோல்வி அடைந்தவனும் இடம்பெற முடியும். ஆனால் வேடிக்கை பார்ப்பவனால் ஒரு போதும் இடம் பெற முடியாது!
காலம் உனக்காக காத்திராது! நீ தான் காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொள்ள வேண்டும்.
மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால், விதையாக விழுந்து மரமாக எழு!
வெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட, மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள். - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
சந்தேகம் தடைகளை மட்டுமே அறியும், நம்பிக்கைதான் பாதையை கண்டறியும்.
விதைத்துக் கொண்டே இரு! முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்!