Full View
cruds.institution.fields.id
Full View

முதல் மூன்று மாதங்கள்

குழந்தை வளர்ச்சி என்பது தனிக்கலையாகவே சொல்லலாம். குழந்தை வேகமாக வளரும் போது அதிகமாகவே கற்றுகொள்வார்கள். பிறந்த குழந்தையின் முதல் மூன்று மாத காலங்கள் மிக மிக முக்கியமானவை.

இந்த மூன்று மாத காலமும் குழந்தையோடு அரவணைப்புடன் இருக்க வேண்டும். குழந்தையின் தூக்கம், பசியாறுதல், இயற்கை உபாதை அனைத்தையும் இளந்தாய்மார்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதனால் அவர்களது மூளை வளர்ச்சி சுறுசுறுப்பாக இருக்கும்.

பிறந்த குழந்தை அதிக நேரம் அழுவார்கள். பெரும்பாலும் பசியுடன் இருக்கலாம். அல்லது இயற்கை உபாதை காரணமாக இருக்கலாம். சமயங்களில் காரணமே இல்லாமல் அழுவார்கள். 6 முதல் 8 வாரங்களில் குழந்தைக்கு அடிக்கடி செவிலியர்கள் மற்றும் குழந்தை மருத்துவ நிபுணர்களின் அருகாமை அடிக்கடி தேவைப்படலாம்.

Full View

குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்

பிறந்த குழந்தை:

பிறந்த குழந்தை முதலில் அழத்தொடங்கும். ஏனென்றால், தொப்புள்கொடி மூலம் சுவாசித்து வந்த குழந்தைக்கு, இயற்கையான சுவாசம் கடும் சிரமத்தைக் கொடுப்பதால்தான் குழந்தை அழுகிறது. பிறந்த குழந்தையின் தலை நிலையாக இருக்காது. பிஞ்சு கழுத்துப் பகுதி முழுமையான வளர்ச்சியடையாததால், தலை ஆடிக்கொண்டே இருக்கும். இதனால், தூக்கும்போது தலையைக் கவனமாகக் கழுத்துடன் சேர்த்துப் பிடித்துத் தூக்க வேண்டும். உடல் பாகங்கள் வளர்ச்சியடையத் தொடங்கியிருக்காது என்பதால், அதன் ஒவ்வொரு அசைவுக்கும் தாயின் உதவி தேவைப்படும்.

குழந்தைகள் வெவ்வேறு விதமாக வளரலாம். சராசரியாக ஒவ்வொரு மாதமும் 0.7 முதல் 0.9 கிலோ வரை உயர்ந்து 2. 5 முதல் 4. செ.மீ வரை வளரும். அவர்களது தலைசுற்றளவு ஒவ்வொரு மாதமும் சுமார் 1. 25 செ.மீ அதிகரிக்கும். பிறந்த குழந்தைகள் பிறந்த உடன் எடை இழக்கின்றன.

ஆரோக்கியமான குழந்தைகள் வழக்கமாக் சுமார் 2 முதல் 3 வாரங்களில் பிறப்பு எடையை துல்லியமாக அடைவார்கள். பிறகு தொடர்ந்து எடை அதிகரிக்க கூடும். குழந்தை பிறக்கும் போதே எடை போடப்படும்.

மருத்துவர் அல்லது செவிலியர் அவர்களது வளர்ச்சியை அட்டவணையில் தவறாமல் குறிப்பார்கள். குழந்தைகள் வேகமாக வளர்வார்கள். குழந்தை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். குழந்தையின் எடை அதிகரிப்பை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம்.

இரண்டாவது மாதம்:

குழந்தை இரண்டாவது மாதத்தில், ஓரளவு வளர்ச்சி பெறத் தொடங்கியிருக்கும். கை – கால்களை அசைக்கத் தொடங்கும். தாயின் முடி, உடை என எது கையில் கிடைக்கிறதோ அதையெல்லாம் பிடிக்க முயற்சிக்கும். முதல் மாதம் இருந்த அளவுக்கு இரண்டாவது மாதத்தில் தலை நடுக்கம் இருக்காது. தானாகவே ஒரு நிலையில் வைக்க முயற்சிக்கும். பிறந்த குழந்தைக்குத்ே தூக்கம் என்பது ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை இருக்கும். இரவு நேரங்களில் சராசரியாக ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை குழந்தைகள் தூங்கும். ஆனால், இந்தத் தூக்கத்துக்கு எப்போதும் பசியில்லாமல் இருப்பது அவசியமாகும். ஒவ்வொரு சில மணி நேர இடைவெளியிலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது அவசியமானதாகும்.

மேற்குறிப்பிட்டதைப் போல, குழந்தைகள் சுவாசக்கோளாறு காரணமாக நீண்ட நேரம் அழுகின்றனர். ஆனால், அழுகைக்கு அது தவிரப் பிற காரணங்களும் இருக்கின்றன. குழந்தை இருக்கும் சூழல் அதிக வெப்பமாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ இருந்தால் அழும். அப்படி ஒன்றும் அதிக வெப்பம் இல்லையே எனச் சாதாரணமாகக் கருதிவிட வேண்டாம். அந்தப் பிஞ்சு தோல் எதையெல்லாம் தாங்க முடியாமல் இருக்கிறதோ அதையெல்லாம் அழுகை மூலமே வெளிப்படுத்தும். கை – கால்களை ஆட்டும் என சொல்லியிருந்தோமல்லவா? அப்படித் தொடர்ந்து செய்வதால் உடல் அயர்ந்து போனது போல் குழந்தை உணர்ந்தாலும் அழத்தொடங்கும். தவிர உடல் நிலை சரியில்லாதது போல் உணர்ந்தாலும் அதை அழுகை மூலமே வெளிப்படுத்தும்.

கண்களைக் குழந்தை உருட்டி உருட்டிப் பார்க்கத் தொடங்கும். அருகில் இருப்பவர்களை அடையாளம் காண முயற்சிக்கும். அம்மாவையும் அப்பாவையும் நினைவில் வைத்துக்கொண்டதைப் பார்வையால் உணர்த்தும்.

பேச்சு சப்தம், கைதட்டல் உள்ளிட்ட சப்தங்களுடன், அன்பாகப் பேசுவதையும் அதட்டலுடன் பேசுவதையும் குழந்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும். தாய், தந்தை மற்றும் நெருங்கிய உறவுகளின் குரல்களை அடையாளம் கண்டுகொள்ள முயற்சிக்கும்.

தன்மீது பாசமாக இருப்பவர்கள் மீது அதிக நெருக்கத்துடன் இருக்கும். யாரெல்லாம் நெருங்கியவர்கள் என்பதை அடையாளம் கண்டுகொள்ளும்.

மூன்றாவது மாதம்:

ஆடிக்கொண்டிருந்த தலை நிலையாக நிற்கத் தொடங்கும். ஜீரண உறுப்புகள் வளர்ச்சியடைவதால், தாய்ப்பால் சிறப்பாக செரிமானமடைய தொடங்கும் காலகட்டம் இது.

அசையும் பொருட்களை நோக்கி பார்வையைத் திருப்பும். தாய் தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவுகளைச் சற்று தொலைவிலேயே அடையாளம் கண்டுவிட முயற்சிக்கும்.

எல்லா உணர்வுகளையும் ஒரே மாதிரியான அழுகை மூலம் உணர்த்திக் கொண்டிருந்த குழந்தை, தூக்கம் உள்ளிட்ட சில உணர்வுகளைச் செய்கை மூலம் உணர்த்த முயற்சிக்கும். விரும்பிய செயலையோ விருப்பமற்ற செயலையோ செய்கை மூலம் உணர்த்தும்.

பசி, அலுப்பு, வியர்வை, போன்றவற்றை வெவ்வேறு விதமான அழுகை மூலம் உணர்த்த முயற்சிக்கும். நெருங்கிய உறவுகளை அடையாளம் கண்டுகொண்டால், சிரித்தோ கை கால்களை அசைத்தோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.

விளையாட்டுப் பொம்மைகளையாே அல்லது வேறு எதாவது பொருளையோ அடையாளம் கண்டால், அதை எட்டிப் பிடிக்க முயற்சிக்கும். மகிழ்ச்சியைச் சப்தமிடுதல் மூலமும் சிரிப்பு மூலமும், நெருங்கியவர்களுடன் விளையாடுவதன் மூலமும் வெளிப்படுத்தும். கையை ஊன்ற முயற்சிக்கும். மகிழ்ச்சியை மட்டுமின்றி சோகத்தையும் வெளிப்படுத்தும். ஒவ்வொரு உணர்வையும் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்..

Full View

ஆரோக்கிய உணவு

ஒரு பிறந்த குழந்தையின் வயிறு அவளது முஷ்டியின் அளவுதான். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை விட சிறந்தது எதுவுமில்லை. பிறந்த முதல் சில மாதங்களில் குழந்தைக்குத் தேவையான சரியான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் உள்ளன.

புதிதாகப் பிறந்த குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி, அவளது வயிற்றில் லேசாக இருக்கும் ஆன்டிபாடிகளும் தாய்ப்பாலில் உள்ளன. இருப்பினும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்கள் உணவு மற்றும் உணவு உட்கொள்ளலைக் கண்காணிக்க வேண்டும் மற்றும் வெளி உணவை விட வீட்டில் சமைத்த உணவை விரும்ப வேண்டும்.

தாய்மார்களும் தவறாமல் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் கர்ப்ப எடை இழப்பு பற்றி கவலைப்பட வேண்டாம். சில சமயங்களில் தாய்ப்பாலின் உற்பத்தி போதுமானதாக இல்லாதபோது அல்லது தாய்ப்பால் கொடுத்த பிறகும் குழந்தை போதுமான எடை அதிகரிக்காதபோது அல்லது பசியுடன் இருக்கும் போது அல்லது ஏதேனும் காரணத்திற்காக தாய் குழந்தைக்கு உணவளிக்க முடியாதபோது, ​​அவரது குழந்தை மருத்துவர் குழந்தைக்கு ஃபார்முலா பால் அல்லது வேறு ஏதேனும் மாற்றாக பரிந்துரைக்கலாம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் தனது மருத்துவர் அறிவுறுத்தியபடி குழந்தையின் பால் உட்கொள்ளலை கூடுதலாக வழங்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சி மற்றும் செரிமான அமைப்பு முதிர்ச்சியடையும் போது பால் உட்கொள்ளல் அதிகரிக்கிறது.

Recent Question Papers & Keys

Comments