Text Book Data - Full View
Full View
6ம் வகுப்பு தமிழ்தொடக்கக் கல்வியின் இறுதி வகுப்பான ஐந்தாம் வகுப்பை முடித்து இடைநிலை பள்ளி வகுப்புகளில் முதல் வகுப்பான ஆறாம் வகுப்பிற்கு வந்துள்ள மாணவச் செல்வங்களே! வெற்றிக்கு வழி குழுமம் உங்களை அன்போடு வாழ்த்தி வரவேற்கிறது!! மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு உங்கள் பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்குமான பொதுக் கருத்துக்கள் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுகுறிப்புகளின் கீழ் பகுதியில் pdf, ppt files & vedio links போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள Study Materials / Question Papers & Keys போனற பகுதிகளை கிளிக் செய்தால் உங்களுக்குத் தேவையான பாட உதவிக் குறிப்புகளையும் வினாத்தாள் விடைத்தாள் குறிப்புகளையும் படிக்கலாம். |
Full View
பருவம் - 1 இயல் - 2 இயற்கை இன்பம்பருவம் - 1 இயல் - 2 இயற்கை இன்பம் இந்த இரண்டாம் இயலில் இயற்கை இன்பம் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சிலப்பதிகாரச் செய்யுளானது இயற்கைக்கு சோழ மன்னனின் சிறப்பை ஒப்பிட்டு நிலவு, சூரியன், மழை போன்றவற்றை வாழ்த்துவதாக அமைந்துள்ளது. “பாரதியார் கவிதைகள்” எனும் தலைப்பின்கீழ் அமைந்த “காணி நிலம்” என்ற செய்யுள் பகுதி பாரதியாரின் கனவு இல்லத்தை பற்றி கூறுகிறது. பறவைகள் இடம் பெயர்தலையும், சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான காரணங்களையும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் “சிறகின் ஓசை” எனும் உரைநடைப் பகுதி விளக்குகிறது. மீன் பிடிக்கப் போராடும் மீனவர் ஒருவரின் முயற்சியைப் பற்றியே இக்கதை அமைகிறது. கடலில் தனது முயற்சியால் மீனுடன் போராடிய கிழவன் இறுதியில் தனது முயற்சியின் பலனை அடைந்தார? இல்லையா? என்பதை “கிழவனும் கடலும்” என்ற துணைப்பாடப்பகுதி விளக்குகிறது. எழுத்துக்களை முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாக பிரித்து அவற்றின் வகைகளை பற்றி கூறுவதே “முதலெழுத்தும் சார்பெழுத்தும்” எனும் இலக்கணப் பகுதியாகும். திருக்குறளில் அறத்துப்பால் எனும் பெரும் பிரிவின் கீழ் அமைந்த கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, மக்கட்பேறு, அன்புடைமை, இனியவை கூறல் போன்ற அதிகாரங்களில் சில குறள்கள் மட்டுமே பாடமாக கொடுக்கப்பட்டுள்ளன. வாழ்விற்குத் தேவையான அறக்கருத்துக்களை “திருக்குறள்” எனும் இச்செய்யுள் பகுதி கூறுகிறது. இவையே இயற்கை இன்பம் எனும் பொருண்மையில் அமைந்துள்ள தலைப்புகள் ஆகும். செய்யுள் : 1. சிலப்பதிகாரம் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் எனும் கருத்து உள்ளது. ஆனாலும் தனது சிலப்பதிகார நூலில் சோழ மன்னனின் சிறப்பை ஒப்பிட்டு இயற்கையை வாழ்த்துகிறார். ஆத்தி மலர் மாலையை அணிந்த சோழ மன்னனின் வெண்கொற்றக் குடை குளிர்ச்சியுடையதைப் போல வெண்மையான நிலவும் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. காவிரி ஆறு பாயக் கூடிய வளம் கொழிந்த நாட்டை ஆட்சி செய்யக் கூடிய சோழ மன்னனின் ஆணைச் சக்கரம் போல சிகரம் போன்றுள்ள இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது சூரியன். கடலை எல்லையாக உடைய உலகிற்கு மன்னன் அருள் செய்வது போல மழையானது வானிலிருந்து பொழிந்து மக்களுக்கு அருள் செய்கிறது. எனவே வெண்ணிலவையும், கதிரவனையும், மழையையும் போற்ற வேண்டும் என இயற்கையை வாழ்த்துவதாக இச்செய்யுள் பகுதி அமைந்துள்ளது. செய்யுள் : 2. காணி நிலம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதி. விடுதலை உணர்வை மக்கள் மனதில் விதைக்கவும், பெண் உரிமைக்காகவும் இவர் எழுதிய பாடல்கள் பலவாகும். அதுமட்டுமின்றி மண் உரிமைக்காகவும் பாடல்கள் இயற்றியுள்ளார். தனது வீடானது தனக்குரிய நிலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை ‘பாரதியார் கவிதைகள்’ எனும் தொகுப்பில் “காணி நிலம்” என்ற தலைப்பில் பாடியுள்ளார். காணி அளவு நிலத்தில் அழகான தூண்களும், தூய மாடங்களையும் கொண்ட ஒரு மாளிகை இருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும், இளநீரைத் தரும் தென்னை மரங்களும் இருக்க வேண்டும். நிலவின் ஒளி வீச வேண்டும். குயின் குரல் கேட்க வேண்டும். இளந்தென்றல் காற்று வர வேண்டும் என பாரதி தனது கனவு இல்லத்தைப் பற்றி காணி நிலம் எனும் இச்செய்யுள் பகுதியில் பாடியுள்ளார். உரைநடை : சிறகின் ஓசை பறவைகளின் தற்போதைய நிலைப் பற்றியே இந்த உரைநடைப் பகுதி பேசுகிறது. மனிதர்களைப் போலவே பறவைகளும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று சில காலங்களுக்குப் பிறகு மீண்டும் தம் சொந்த இடத்;தை அடைவதையும், அவ்வாறு இடம் பெயர்தலை ‘வலசை போதல்’ என்றும் கூறுகின்றனர். 1500 ஆண்டுகளுக்கு முன்பே சத்திமுத்தப் புலவர் தம் பாடலில் “வலசை போதல்” பற்றிய செய்தியை பாடியுள்ளார். உணவு, இருப்பிடம், தட்ப வெப்பநிலை மாற்றம், இனபெருக்கம் போன்றவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. ‘வலசை’ போகும் போது பறவைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், தற்போது அழிந்து வரக் கூடிய பறவை இனமான சிட்டுக்குருவி பற்றியும், அது அழிவதற்கான காரணம் பற்றியும், அதை காப்பாற்ற மேற்கொள்ளக் கூடிய வழிமுறையையும் கூறுகிறது. பாரதியார் மற்றும் சலீம் அலியைப் போல காக்கை குருவி நமது சாதி என்பதை அறிந்து பறவைகள் இல்லாத உலகில் நம்மால் வாழ முடியாது என்பதை உணர்ந்து இயற்கையைப் போற்றி பறவைகளை காக்க வேண்டும் எள்பதை இந்த உரைநடைப் பகுதி விளக்குகிறது. துணைப்பாடம் : கிழவனும் கடலும் மனிதன் இயற்கையோடு போரடிக்கொண்டே இருக்கிறான். அந்தப் போராட்டமே அவன் வாழ்வை அமைக்கிறது. “கிழவனும் கடலும்” எனும் இக்கதையின் நாயகன் சாண்டியாகோ. இவர் ஒரு மீனவர். இவர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று மீன் பிடிக்காமல் ஒரு நாள் கூட திரும்பியதில்லை. மனோலின் எனும் சிறுவனை மீன் பிடிக்க கற்றுக் கொள்வதற்காக அவனது பெற்றோர் சாண்டியாகோ உடன் கடலுக்கு அனுப்புகின்றனர். முதல் நாற்பது நாளில் ஒரு மீன் கூட கிடைக்காததால் அவனுடைய பெற்றோர் அவனை வேறு படகிற்கு அனுப்புகின்றனர். பிறகு அவர் மட்டும் மீன் பிடிக்க செல்கிறார். அன்று எண்பத்து ஐந்தாவது நாள.; இன்று கண்டிப்பாக மீனைப் பிடித்துவிட்டே கரைக்கு செல்ல வேண்டும் என்று சாண்டியாகோ கடலுக்குள் செல்கிறார். அன்றும் ஒரு மீன் கூட கிடைக்காத நிலையில் படகிலேயே இரவு தங்கிவிடுகிறார். அடுத்த நாள் பசியுடனும், சேர்வுடனும் இருந்த நண்பகல் வேலையில் ஏதோ ஒன்று தூண்டில் கயிறை இழுப்பதை கவனித்தார். மீன் தான் என்பதை உறுதி செய்துகொண்டு; தூண்டிலை வேகமகாக படகிற்கு இழுக்க முயற்சி செய்கிறார்;. முடியவில்லை. சோர்வுடன் இருந்த சாண்டிக்கோ எப்படியும் மீனைப் பிடித்தே தீருவேன் என்று பல போராட்டங்களுக்கு பிறகு அந்த மீனைக் கொன்று பிடிக்கிறார்;. படகை நோக்கி பல மீன்களும், சுறாக்களும் வருக்கின்றன. அனைத்துடனும் போராடி ஒரு வழியாக கரையை அடைகிறார். சுறாக்கள் தின்றது போக கடைசில் மீனின் தலையும் அதன் எலும்புகளும் தான் மிஞ்சியது. சாண்டியாகோவை பார்க்க மனோலின் வருகிறான். எவ்வளவு பெரிய மீன் அது ‘நீங்கள் பெரிய வீரன் தான் தாத்தா’ என்று கூறுகிறான். சாண்டியாகோ நடந்தவற்றை அவனிடம் வருத்தமாக கூறுகிறார். மனோலின் தாத்தா உங்கள் திறமையும், விடாமுயற்சியும் வென்றுவிட்டது. வெற்றி, தோல்வி என்பதை தவிர்த்து சாம் மேற்கொள்ளும் முயற்சி எவ்வளவு என்பதை மையமாக கொண்டே இத்துணைப்பாட பகுதி அடமைந்துள்ளது. இலக்கணம் : முதலெழுத்தும் சார்பெழுத்தும் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகைப்படும். முதலெழுத்து என்பது உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், மெய் எழுத்துகள் பதினெட்டும் சேர்ந்த முப்பது எழுத்துக்களும் ‘முதல் எழுத்துக்கள்’ ஆகும். இது எழுத்து தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதல் காரணமாக உள்ளது. சார்பெழுத்து என்பது முதல் எழுத்தை சார்ந்து வருவது ஆகும். இது பத்து வகைப்படும். அதில் முதல் இரண்டான உயிர்மெய் மற்றும் ஆய்தம் பற்றிய விளக்கங்கள் மட்டுமே இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இச்செய்திகளே முதலெழுத்தும் சார்பெழுத்தும் எனும் இலக்கணப்பகுதியில் அமைந்துள்ளது. |
Full View
பருவம் - 1 இயல் - 1 தமிழ்த்தேன்பருவம் - 1 இயல் - 1 தமிழ்த்தேன் இவ்வியலில் தமிழ்த்தேன் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள “இன்பத் தமிழ்”, “தமிழ்க்கும்மி” ஆகிய செய்யுள் பகுதியானது தமிழின் சிறப்பு, தொன்மை மற்றும் அதன் புகழ் போன்றவற்றை பாடி மகிழும் வகையில் அமைந்துள்ளது. “வளர்தமிழ்” என்ற உரைநடைப்பகுதி கற்காலம் முதல் இப்போதுள்ள கழியுக காலம் வரை தமிழ் மொழியின் செம்மை தன்மையையும், வளர்ச்சி நிலையையும் கூறுகிறது. “கனவு பலித்தது” எனும் விரிவானப் பகுதி சாதனைக்கு மொழி ஒரு தடையே இல்லை என்ற கருத்தை முன் வைக்கிறது. “தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்” எனும் இலக்கணப் பகுதி தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் அதன் வகைகளையும், தொகுதிகளையும் விவரித்து கூறுவதாக அமைகிறது. “தமிழ்த்தேன்” என்ற பொருண்மையில் இத்தலைப்புகள் அனைத்தும் உள்ளன.
செய்யுள் : 1. இன்பத்தமிழ்
செய்யுள் : 2. தமிழ்க்கும்மி
உரைநடை : வளர்தமிழ்
துணைப்பாடம் : கனவு பலித்தது (கடிதம்)
இலக்கணம் : தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
|
Full View
பருவம் - 1 இயல் - 3 எந்திர உலகம்எந்திர உலகம் “எந்திர உலகம”; எனும் இத்தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட பகுதிகளானது அறிவியலின் வளர்ச்சி நிலைகளை பற்றியே கூறுகிறது. “அறிவியல் ஆத்திசூடி” என்ற செய்யுளானது அறிவியலில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளது. “அறிவியலால் ஆள்வோம”; எனும் இச்செய்யுள் பகுதியானது அறிவியல் வளர்ச்சியால் இவ்வுலகின் வளர்ச்சி நிலைக் குறித்து விளக்குகிறது. “கணியனின் நண்பன்” என்ற உரைநடைப் பகுதியானது தானியங்கிகள் பற்றியும,; அதன் செயல்பாடுகள் பற்றியும், எந்திரத்திற்கும் தானியங்கிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றியும் கணியனும் எந்திர மனிதனும் உரையாடும் வகையில் அமைந்துள்ளது. “ஒளி பிறந்தது” எனும் விரிவானப் பகுதியானது ஒரு தொழில் நுட்ப கண்காட்சியில் அப்துல் கலாம் அவர்களிடம் பெரிய திரையில் மாணவர்கள்; கேள்விகள் கேட்டு அதற்கு கலாம் அவர்கள் விளக்கம் அளிப்பது போல் எழுதப்பட்டுள்ளது. “மொழிமுதல், இறுதி எழுத்துக்கள்” எனும் இலக்கணப் பகுதியானது மொழிக்கு முதலில், இடையில், இறுதியில் வரும் எழுத்துக்கள் பற்றியும் மொழிக்கு முதலிலும், இறுதியிலும் வராத எழுத்துக்கள் பற்றியும் விளக்குகிறது. இச்செய்திகளே அறிவியல், தொழில்நுட்பம் என்ற பொருண்மையின் கீழ் அமைந்துள்ள செய்தியாகும். செய்யுள் : 1. அறிவியல் ஆத்திச்சூடி
உரைநடை : கணியனின் நண்பன்
துணைப்பாடம் : ஒளி பிறந்தது (அப்துல் கலாமுடன் நேர்க்காணல்)
இலக்கணம் : மொழி முதல், இறுதி எழுத்துக்கள்
|
Full View
பருவம் - 2 இயல் - 1 கண்ணெனத் தகும்கண்ணெனத் தகும் இவ்வியலின் பொருண்மையானது கல்வி என்பது கண்களுக்கு இணையானது என கல்வியின் சிறப்பை கூறுவதாகும். ‘மூதுரை’ எனும் செய்யுளானது நாட்டை ஆளும் மன்னனையும், குற்றமில்லாத கல்வி கற்றவனையும் ஒப்பிட்டு கற்றவனின் சிறப்பை கூறும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நூலை கற்றதோடு மட்டும் நில்லாமல் அதன் கருத்தை தம் வாழ்வோடு பயன்படுத்தி வாழ வேண்டும் என ‘துன்பம் வெல்லும் கல்வி’ எனும் செய்யுள் பகுதி கூறுகிறது. மாணவர்களின் நலனுக்காக கல்வி பணி செய்த கர்மவீரர் காமராசர் பற்றி ‘கல்வி கண் திறந்தவர்’ என்ற உரைநடைப்பகுதி விளக்குகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஆறாம் வகுப்பு மாணவர்களை ஆசிரியர் களப்பயணமாக அழைத்துச் சென்று நூலகத்தின் சிறப்பையும், நூல்களின் பயனையும் விளக்கும் வகையில் ‘நூலகம் நோக்கி’ எனும் இந்த விரிவானப் பகுதி அமைகிறது. எழுத்துக்கள் ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றுள் ஒற்றுமை ஏற்படும். இதுவே ‘இன எழுத்து’ ஆகும். மெய் எழுத்துக்களையும், உயிர் எழுத்துக்களையும் தொடர்ந்து எந்த எழுத்துக்கள் இன எழுத்தாக வரும் என்பதையே இந்த இலக்கணப் பகுதி விளக்குகிறது. கல்வியின் சிறப்பு குறித்தே இவ்வியல் விவரிக்கிறது. செய்யுள் : 1. மூதுரை
விரிவானம்: நூலகம் நோக்கி
இலக்கணம் : இன எழுத்துக்கள்
|
Full View
பருவம் - 3 இயல் - 1 புதுமைகள் செய்யும் தேசமிது
செய்யுள் : 1. பாரதம் அன்றைய நாற்றங்கால்
உரைநடை : தமிழ்நாட்டில் காந்தி
துணைப்பாடம் : வேலுநாச்சியார்
இலக்கணம் : நால்வகைச் சொற்கள்
|
Full View
பருவம் - 3 இயல் - 2 எல்லாரும் இன்புறஎல்லாரும் இன்புற
செய்யுள் : 1. பராபரக் கண்ணி
செய்யுள் : 2. நீங்கள் நல்லவர்
உரைநடை : பசிப்பிணி போக்கிய பாவை
துணைப்பாடம் : பாதம்
இலக்கணம் : பெயர்ச்சொல்
|