Informations - Full View

Full View

பத்தாம் வகுப்புக்குப் பிறகு..........

அன்பு நிறைந்த மாணவ மாணவிகளே..... நமது வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நிகழ்வுகளை சிந்திக்க வேண்டிய தருணம் இது. பத்தாம் வகுப்பு வரை நீங்கள் பல்வேறு தலைப்பிலான பாடங்களை படித்திருப்பீர்கள். நமது வாழ்வியல் சார்ந்த பல்வேறு தகவல்களையும் படித்திருப்பீர்கள். எந்தெந்த பாடங்களை நீங்கள் விரும்பிப்படித்தீர்கள். எந்தெந்த பிரிவுகள் உங்கள் வாழ்வினையும் இந்த சமூகத்தின் வாழ்வினையும் மேம்படுத்தும் என்பதை சிந்தியுங்கள். எந்த பிரிவினை தெர்ந்தெடுத்தால் உங்களுக்கு நிறைய பணத்தினை சம்பலமாக பெற்றுத்தரும் என்று மட்டும் சிந்திக்க வேண்டாம். எந்த பிரிவினை தெர்ந்தெடுத்தால் நீங்கள் மனமகிழ்வோடு பனியாற்றுவீர்கள் என்பதை முக்கியமாக சிந்தியுங்கள். நீங்கள் தேர்வுசெய்யும் பிரிவு உங்களது வாழ்வினை  மேம்படுத்துமா இந்த மனதகுழத்திற்கு எந்த வகையில் மேம்படுத்தும். நாம் வாழும் உலகத்தை மேம்படுத்துமா... இந்த இயற்கையை பாதிக்காத விதத்தில் அமையுமா என்பது பற்றி கூட சிந்திக்கலாம்.